Wednesday 30 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 7

பாடல் - 7
ராகம் - அம்ருதவர்ஷினி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வெய்த
உடை முயங்கும் அரவோடு இழிதந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கடல் முயங்கு கழி சூழ்குளிர் கானல் அம்பொன் அம்சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
கடலில் உணரப்படும் குளிர்ந்த காற்று போல், குளிர்ச்சியான, அம்பொன் -சிறந்த பொன்மயமான, அம்சிறகு - அழகிய சிறகுகளை உடைய அன்னப்பறவைகள் வசிக்கும் பிரமாபுரம் மேவிய பெம்மான் எப்படிபட்டவர்?

1. சடையில் கங்கையினை தாங்கியவர்
2. தாருகா வன முனிவர்கள் எய்த நெருப்பினை கையில் தாங்கியவர்
3. சதங்கைக்கட்டி ஆனந்த நடம் ஆடுபவர்
4. தன் கழுத்தில், உடையாக பாம்பினை உடுத்தவர்
5. நம் உள்ளத்தை கவர்ந்த கள்வர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment