Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே

அண்டத்தில் உள்ளவர்கள் பணிந்து போற்றும் ஆலவாயானின் திருநீறானது:
1. குண்டிகை - கமண்டலம், சாக்கியர் - சமணர்.
கமண்டலம் ஏந்தும் பௌத்தர்கள், சமணர்கள் ஆகியவர்களுக்கு திகைப்பினைத் தருவது.
2. எண்ணுவதற்கு இனியது.
3. எட்டுத் திசைகளில் வாழும் உணர்வுடயோர்களால் (sensible persons), போற்றப்படுவது.

No comments:

Post a Comment