Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 5

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே

சொக்கநாத பெருமானின் திருநீறு,
1. பூசிக்கொள்வதற்கு இனிமையானது
2. புண்ணியத்தை தரவல்லது
3. அதனைப்பற்றி பேசுவதற்கு இனிமையானது
4. பெரிய தவம் புரியும் முனிவர்களுக்கு எல்லாம், ஆசைகளை அறுப்பது
5. முடிவானது (பேரின்ப நிலையைத் தரவல்லது)
6. உலகத்தாலும், அதில் வாழ் மக்களாலும் புகழத் தக்கது.

No comments:

Post a Comment