Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 6

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

அழகிய மாளிகை சூழ்ந்த திருஆலவாய் (மதுரை) என்னும் தலத்து இறைவனின் திருநீறு ஆனது:
1. அருத்தம் - செல்வம். உயர்ந்த மதிப்புடையதாகும்.
2. அவலம் - துயரம்/கவலை தரும் பிறப்பு இறப்பு சுழற்சி. அந்த சுழற்சியைத் துண்டிக்கும்.
3. வருத்தம் (சோகம்/துன்பம்) தீர்ப்பது
4. வானம் - இன்பம் அல்லது அழகு அளிப்பது. வானம் - வனப்பு - அழகு.
5. இட்டுக்கொள்வோர் யாவருக்கும் பொருத்தமாக இருப்பது.
6. புண்ணியம் செய்தோர்களால் பூசப்படுவது.

No comments:

Post a Comment