Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 3

முத்தித் தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தித் தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தித் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

ஆலவாய் அண்ணலின் திருநீறு,

1. முக்தித் தரும் - மோக்ஷம்
2. முனிவர்கள் அணிவது
3. சத்தியமானது - அதுவே உண்மை
4. தகுந்தவர்களால் புகழப்படுவது
5. இறைவனிடத்தில் பக்தி உண்டாகச் செய்வது
6. வாழ்த்தத் தகுந்தது (ஒன்றைப் பற்றி புகழ வேண்டுமானால், அதற்கு தகுதி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி உடையது நீறு)
7. அட்டமாசித்திகளை (எட்டு சித்திகள் - அணிமா, மஹிமா, கரிமா, லஹிமா, ப்ராதி, ப்ரகாம்யம், வசித்வம், ஈசத்வம்) தர வல்லது.

No comments:

Post a Comment