Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 7

எயிலது வட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம் அதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருஆல வாயான் திருநீறே

அயில் - கூறிய மும்முனைகளை உடைய சூலம்.
சூலத்தைக் கையில் ஏந்திய ஆலவாயானின் திருநீறு,
1. எயில் - மதில். மும்மதில்/மூவெயில் - திரிபுரம். திரிபுரத்தை எரித்தது. திரிபுரம் எரிந்து பின் சாம்பலாக ஆயிற்று.
2. இம்மை, மறுமை ஆகிய இருபிறவிக்கும் பாதுகாப்பு தரவல்லது.
3. அணிவோர்க்கு (அணிந்து பழகியோர்க்கு) பலனைத் தருவது
4. பாக்கியம் - செல்வம். திருநீறே செல்வமாகும். விபூதி என்றால் பெருமை.
5. துயில் - உறக்கம். சோர்வினைத் தவிர்ப்பது.

இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். பகலில் சில சமயங்களில் உறக்கம் வருவது போலோ, தலை வலிப்பது போலோ உணர்ந்தால், திருநீறை நெற்றியில் இட்டுக்கொள்வேன். ஒரு புத்துணர்வு கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட நீரை, திருநீறு உறிஞ்சிவிடும் என்று பலர் அறிவியல் ரீதியாக ஆராய்ந்துள்ளனர். அதனால் தலைவலி குணமடைகிறது. தோலில் ஏற்படும் அரிப்பு கூட சரியாகி விடும். சர்வ ரோக நிவாரணி.

6. சுத்தமானது.

No comments:

Post a Comment