Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 9

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே

ஆலம் - விடம். விடத்தை உண்டு, அதனால் கறுத்த மிடறுடைய (மிடறு - கழுத்து), ஆலவாயனின் திருநீறு,
1. மாலும் (விஷ்ணுவும்), அயனும் (பிரம்மனும்) அறியாத வண்ணம் உடையது. சிவபெருமானின் அடியும் முடியும் காண பிரமனும், விஷ்ணுவும் மேலும் கீழும் தேடி அலைந்து தோல்வியுற்றனர் அல்லவா? அதனால் அவர்களால் அறிய முடியாத வண்ணம் கொண்டது என்கிறார்.
2. வானுலகில் உள்ள தேவர்கள், தங்கள் உடல் முழுதும் பூசிக்கொள்வது.
3. பிறவி என்னும் துயரைத் தீர்க்கவல்லது. பிறவி இல்லை எனில் இன்பமே. அதனால் பேரின்பத்தைத் தர வல்லது.

No comments:

Post a Comment