Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 8

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

அரா - பாம்பு. பாம்புகளை அணிந்த திருமேனி உடைய சிவபெருமான் அவன் திருநீறு,
1. இராவணன் அவன் உடலில் பூசிக்கொண்டு பயன் பெற்றது.
2. நல்ல சிந்தனை கொண்டவர்களால் நினைக்கத் தக்கது.
3. பராவணம் - பரா சக்தி. பராசக்தியின் வடிவமானது.
4. பாவங்களை அறுக்கக்கூடியது.
5. தராவணம் - உயர்ந்த தத்துவம். பிரம்ம ஞானம் ஆனது.
6. தத்துவம் - மெய்ப்பொருள் (பிரம்மம்) ஆனது.

No comments:

Post a Comment