Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 4

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

ஈசனின் திருநீறு எப்படிபட்டது?

1. காண்பதற்கு இனியது
2. அழகைத் தர வல்லது
3. அதனை அணிவோர்க்கு பெருமை தரக்கூடியது.
4. மாணம் - இறப்பு. இறப்பினைத் தடுப்பது. மாளுதல் - இறத்தல். மாள் + அம் = மாளம். ள என்பது ண என்று சந்தியில் (புணர்ச்சியில்) மாறும்.
5. அறிவைத் தரும். திருநீறு அணிவதால் நமக்கு தெளிவு பிறக்கும். சோர்வு தீர்வதை நான் அனுபவித்துள்ளேன். சோர்வில்லை எனில், எதுவும் எளிதாகும். அதனால் நாம் நிறைய விஷயங்களை அறியலாம்.
6. சேணம் - உயர் நிலை. உயர்ந்த நிலையினை நமக்கு தரும்.

No comments:

Post a Comment