Thursday 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 2

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

சீதப் புனல் - குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர் நிறைந்த வயல்களை உடைய மதுரையில் அருள் புரியும் இறைவனது திருநீறு,

1. வேதங்களால் புகழப்படும் பெருமை வாய்ந்தது. திருநீற்றினை அணிந்த பின்னரே வேத மந்திரங்களை ஓதவும், கர்மங்கள் செய்யவும் வேண்டும்.
2. நம்மை வாட்டக்கூடிய துயரங்களைத் தீர்க்க்கூடியது.
3. மெய்ஞானத்தை (போதம் - சிவ ஞானம்) தரக்கூடியது.
4. (புன்மை) அறியாமையை அழிக்கக் கூடியது.
5. யாவராலும் போற்றத்தக்கது.
6. உண்மையாய் என்றும் நிலைத்து இருப்பது. இந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் மிஞ்சி இருப்பது சாம்பல் ஒன்று மட்டுமே.

No comments:

Post a Comment