Friday 1 January 2016

திருப்பிரமபுரம் - சீர்காழி - 9

பாடல் - 9
ராகம் - பிலஹரி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தண்டாமரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்த
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
தாழ் சடை தவழும் பெருமானின் நெற்றியினையும் (தலை என்று வைத்துக் கொள்ள வேண்டும்), திருப்பாதங்களையும் காண, மால் (விஷ்ணு) , தண்டாமரையான் (தண் + தாமரையான் = குளிர்ந்த தாமரையில் வாழ்பவர், பிரம்மா) இருவரும் தேடி அலைந்தனர். அவர்கள் முன் நீண்ட நெற்றி உடையவராய், ஜோதிப்பிழம்பாக நிமிர்ந்து நின்றார் பெருமான். அவர் நம் உள்ளம் கவர் கள்வன்.

வாணுதல் - வாள் + நுதல் = வாள் போல், கூறிய மெல்லிய நெற்றி உடைய பெண்கள், மற்றும் வையத்தில் வாழும் பெரியோர்கள் புகழ்ந்து பாடும், நன்முறையில் வையத்தை காக்கும், பிரமாபுரம் மேவும் பெருமான் இவரே.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment