Wednesday 13 January 2016

திருநெடுங்களம் - 5

ராகம் - அடானா
தாளம் - ரூபகம்

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கிநில்லார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

பாங்கினல்லார் - பாங்கில் நல்லவர் - குணங்களால் நல்லவர்கள் (அ) நற்பண்புகள் உடையவர்கள்

படிமஞ்செய்வார் - படிமம் செய்வார் - தவம் செய்பவர்கள்

பாரிடமும் - பாரில் வாழும் பிறர்

நெடுங்களத்தில் மேவும் இறைவனே, நீ, நற்குணங்கள் உடையவர்கள், தவம் மேற்கொள்பவர்கள், பாரில் வாழும் இல்லறத்தோர் ஆகியோரிடமிருந்து பலி (பிக்ஷை) வாங்குகிறாய். உனது இந்தச் செயலில் மனம் ஒன்றி, நல்லோர் பாடும் பாடல்களால் தொழத்தக்க நின் திருவடிகளை வணங்கி, அந்த திருவடி நிழல்களிலிருந்து விலகாத அடியவர்களின் இடர்களை களைய வேண்டும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment