Monday 4 January 2016

திருப்பிரமபுரம் - சீர்காழி - (நூற்பயன்) - 11

நூற்பயன்
ராகம் - சுருட்டி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

அருநெறிய மறை வல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

பொருள்:

அருமையான நெறிகளை பயிற்றுவிக்கும் வேதத்தில் வல்ல முனிவர் - பிரம்மா. அவர் பொய்கையில் வளரும் மலரில் (தடாகத்தில் வளரும் மலர் - தாமரை) வசிப்பவர். நன்னெறி நிறைந்த பிரமாபுரத்தில் பிரம்மா சிவபெருமானை பூஜித்தார். இந்த பிரமாபுரம் மேவிய சிவபெருமானை, ஒருமனதோடு வழிபட்டு உணர்ந்த திருஞானசம்பந்தர் இயற்றிய இந்த 10 பாடல்கள் கொண்ட வினைக்களையும் பதிகத்தை பாராயணம் செய்வோரின் பழவினைகள் யாவும் எளிதில் தீரும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment