Monday 18 January 2016

திருநெடுங்களம் - 8

ராகம் - சாரங்கா
தாளம் - ரூபகம்

குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

குன்று - மேரு மலை
மேரு மலையிலிருந்து வாயு பகவான், மூன்று சிகரங்களை பெயர்த்து எடுத்தார். அதனை ஒன்றாக்கி, அதில் மேல் ஒரு நகரத்தை ஸ்தாபனம் செய்தார். அந்நகரமே இலங்கை. அந்த லங்காபுரியை சுற்றி உள்ள மதில்களில், நிறைய கொடிகள் கட்டப்பட்டிருக்கும். அதனால் சம்பந்தர் இங்கே, குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை என்று பாடுகிறார்.

அரக்கர் கோன் - அரக்கர்களின் தலைவன், ராவணன். இலங்கையின் அதிபதி.

ஒருமுறை ராவணன், ஸாமகானம் செய்து, சிவபெருமானை மயக்கி, கயிலாய மலையையே இலங்கைக்கு எடுத்துச்செல்லலாம் என்று திட்டம் தீட்டினான். அவனது சூழ்ச்சியை அறிந்த நம்பெருமான், தன் கால் கட்டை விரலை சற்று பலமாக அழுத்தி, ராவணனை அந்த கயிலை மலைக்கு கீழே தள்ளி, வெற்றிக்கொண்டார்.

இவ்வாறு இரவும் பகலும், பல நல்ல துதிகளை பாடி, இறைவனையே போற்றி, மனம் உருகும் அடியார்களின் துன்பத்தை நீக்கி அருளவேண்டும் என்று நெடுங்களம் மேவும் பெருமானை சம்பந்தர் வேண்டுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment