Monday 11 January 2016

திருநெடுங்களம் - 3

ராகம்: சாவேரி
தாளம்: ரூபகம் 

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத  
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த 
பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும் 
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களமேயவனே 

பொருள்:
நெடுங்களம் மேவும் இறைவனே, தூயவனே (நிமலா), உனது திருவடியை வழிபட்ட மார்கண்டேயனை, யமனின் பிடியிலிருந்து விடுவித்து காத்தாய். என் அடியவனின் உயிரை பறிக்காதே என்று கூற்றுவனை (யமனை) கடிந்து,  அந்த யமனை காலால் உதைத்தாய். அந்த திருப்பாதங்களை நாளும் பூக்கள், நீர் ஆகியவற்றைக் கொண்டு வழிபட்டு (அபிஷேகம் செய்து, அர்ச்சித்தல்) வரும் அடியார்களின் துன்பத்தை போக்குவாயாக.

நிமலா - மாசற்றவன், தூயவன். மாசற்ற ஜோதி என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் இறைவனை குறிப்பிடுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment